சென்னை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் சாலையில் கன மழையின் காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.
நேற்று மாலை முதல் ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.
சாதாரண மழை பெய்தாலே மழைநீர் தேங்கும் இந்த சாலையில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தை எப்படி தாக்கு பிடிக்கும் என்கின்றனர் பொது மக்கள்.
கண்டோன்மென்ட் நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.