Skygain News

கனமழையால் திருமுல்லைவாயில் சாலைகளில் தேங்கிய மழைநீர்

சென்னை அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் சாலையில் கன மழையின் காரணமாக மழைநீர் தேங்கி நிற்கிறது.

நேற்று மாலை முதல் ஆவடி திருமுல்லைவாயில் பகுதியில் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர்.

சாதாரண மழை பெய்தாலே மழைநீர் தேங்கும் இந்த சாலையில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கத்தை எப்படி தாக்கு பிடிக்கும் என்கின்றனர் பொது மக்கள்.

கண்டோன்மென்ட் நிர்வாகம் மழைநீரை அப்புறப்படுத்தி மழைநீர் தேங்காதவாறு நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More