Skygain News

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 10 பேர்..! மெரைன் போலீசார் விசாரணை…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அண்மைக்காலமாக கடல் வழியாக இலங்கை வாழ் தமிழ் மக்கள் தமிழகத்திற்குள் அகதிகளாக தஞ்சம் அடைந்து வருகின்றனர் இந்நிலையில் ராமேஸ்வரம் இலங்கைக்கு மிக அருகாமையில் இருக்கும் காரணத்தால் அண்மைக்காலமாக இலங்கையில் இருந்து ஏராளமானோர் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி பகுதிக்கு மர்ம படகுமூலம் அகதிகளாக வருகின்றனர்.

இந்நிலையில் மர்ம படகு ஒன்றில் இலங்கையில் இருந்து அகதிகளாக 10 பேர் தனுஷ்கோடி பகுதிக்கு வந்திருப்பதாக மரேன் போலீசாருக்கு முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு வந்து போலீசார் விசாரணை மேற்கொள்ளும் பொழுது இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ வழி இன்றி தமிழகத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக அவர்கள் தெரிவிக்க தற்போது அவர்களை மீட்ட போலீசார் மண்டபம் மரேன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More