Skygain News

கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலையை தொடர்ந்து திருவள்ளூரில் 12ஆம் வகுப்பு மனைவி தற்கொலை..!

தமிழகத்தை பதற வைத்த கள்ளக்குறிச்சி மாணவியின் தற்கொலை சம்பவம் அரங்கேறிய சில நாட்களில் திருவள்ளூரில் மீண்டும் ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழிந்துள்ளது.

திருத்தணி மாவட்டம் தக்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூசனம்,முருகம்மாள் தம்பதி . இவர்களது ஒரே மகள் சரளா . இவர் திருவள்ளூர் மாவட்ட கீழச்சேரி ஊராட்சியில் உள்ள அரசு நிதி உதவி பெறும் தனியார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்ல சீருடை அணிந்து சக தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் சக மாணவிகள் உணவு சாப்பிட சென்று விட்டனர் அப்போது தனியாக இருந்த மாணவி சரளா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்ட் சந்திர தாசன், சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து மாணவி தற்கொலை குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் இடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More