Skygain News

கும்மிடிப்பூண்டி அருகே விற்பனைக்காக பதுக்கப்பட்ட 150 கிலோ குட்கா பறிமுதல்…

கும்மிடிப்பூண்டி அருகே கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் எல்லையில் தொடர்ந்து தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்வதாக சிப்காட் காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து குட்கா சில்லரை வியாபாரம் செய்து வந்த கும்மிடிப்பூண்டி பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி ஈச்சங்காடு மேட்டை சேர்ந்த சீனிவாசன் என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய தொடர் விசாரணையில் ஈச்சங்காடு மேட்டில் உள்ள அவரது வீட்டில் குட்கா மூட்டைகள் இருப்பதாக வாக்குமூலம் அளித்தார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிப்காட் காவல் நிலைய போலீசார் அவரது வீட்டில் நான்கு மூட்டைகளில் இருந்த குட்காவை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரின் காரை பரிசோதனை செய்தபோது காரில் இருந்த இரண்டு மூட்டை குட்காவும் சிக்கியது.

இதனால் ஆறு மூட்டைகளில் இருந்த 150 கிலோ குட்காவை பறிமுதல் செய்த சிப்காட் காவல் நிலைய போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் மற்றும் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட மோகன் ரெட்டி என்பவரிடம் கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More