Skygain News

ஒரே நாளில் துருக்கியில் 3 பெரிய நிலநடுக்கம்! 4000ஐ எட்டிய உயிரிழப்பு!

துருக்கி நாட்டில் நேற்று முதலில் காலை மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகியிருந்தது.
இந்த நிலநடுக்கம் அதிகாலையில் ஏற்பட்டதால் உயிரிழப்பு அதிகமாக இருந்தது.

அடுத்தடுத்த நிலநடுக்கம் இந்திய நேரப்படி மாலை 3.54 மணிக்கு ஏற்பட்ட மற்றொரு நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6ஆகப் பதிவாகி இருந்தது.
கஹ்ராமன்மாராஸ் மாகாணத்தில் உள்ள எல்பிஸ்தான் மாவட்டத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து சிறிது நேரம் கழித்து ரிக்டர் அளவுகோலில் 6ஆக மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இப்படி அடுத்தடுத்து 24 மணி நேரத்திற்கு மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
துருக்கி, சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4000ஐ தாண்டியுள்ளது.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More