Skygain News

ஊரப்பாக்கத்தில் ஃபிரிட்ஜ் வெடித்த விபத்தில் 3 பேர் பரிதாப பலி..!

சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் கோதண்டராமன் நகரில் உள்ள கிரிஜா என்பவரின் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. மின் கசிவின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது . இந்த விபத்தில் வெங்கட்ரமணன் என்பவருக்கு திதி கொடுப்பதற்காக துபாயிலிருந்து வந்த மூன்று பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் . பலத்த காயமடைந்த பாரதி, ஆராதயா ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மின் கசிவு காரணமாக ஃபிரிட்ஜ் வெடித்ததில் கிரிஜா( 63) அவரின் தங்கை ராதா(55), ராஜ்குமார்( 48) ஆகியோர் மூச்சு திணறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

துபாயிலிருந்து நேற்று முன் தினம் தான் மூன்று பேரும் சென்னை திரும்பி இருக்கிறார்கள். மூன்று பேரும் ஒரே அறையில் படுத்து தூங்கி இருக்கிறார்கள் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More