Skygain News

மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்ட போட்டி 50 அணிகள் பங்கேற்பு..!

விருதுநகரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்றது.

விருதுநகர் சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் 14, 17, 19, வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் அனைத்தும் நடத்தப்படுகின்றது.

போட்டிகளை பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி துவக்கி வைத்தார். மாவட்ட அளவில் நடைபெறும் கூடை பந்தாட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான கூடை பந்தாட்ட போட்டிக்கு தகுதி பெறுவார்கள். இந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து 50க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் கலந்து கொண்டனர்.

சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த கூடை பந்தாட்ட போட்டியில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற சத்திரிய மகளிர் மேல்நிலைப் பள்ளி அணிக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன . மேலும் தனிநபர் சிறப்பு ஆட்ட பரிசை மாணவி தேன்மொழி பெற்றார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More