சென்னை மதுரவாயல் கங்கையம்மன் நகர் 8 வது தெரு பகுதியில் வசித்து வரும் பிரகாஷ்-பூர்ணிமா தம்பதியரின் ஒரே மகள் தியா . இவர்கள் வீட்டின் அருகேயே அத்தை மகேஸ்வரி வீடூ உள்ளது அங்கு நேற்று முன் தினம் இரவு வீட்டின் முதல் மாடி பால்கனியில் தியா விளையாடி கொண்டிருந்த போது எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழந்தார் .
உடனே குழந்தையை மீட்ட பெற்றோர் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்,ஆங்கு தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தை தியா சிகிச்சை பழனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் , மாடியிலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.