ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் -30 லோடு ஆட்டோ டிரைவரான இவருக்கு தமிழ்அரசி வயது-21 என்ற மனைவியும் இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தாரணிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் தமிழ்அரசி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் அவரது கணவர் ஜானகிராமன் மற்றும் குடும்பத்தினர் திருத்தணி கோயிலுக்கு சென்றுள்ளனர் இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த தமிழ்அரசி பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீட்டை விட்டு தமிழரசி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது தமிழரசி வீட்டினூள் ஹாலில் உள்ள பேனில் புடவையால் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளார் பிறகு அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாக மனைவி இறந்த சம்பவத்தை குறித்து ஜானகிராமன் மற்றும் ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் அதன்பேரில் ஆற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தமிழரசியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்னர் ஏழு மாத கர்ப்பிணி பெண்ணின் மரணம் தற்கொலையா இல்லை வேற ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் ஏழு மாத கர்ப்பிணி பெண் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது