Skygain News

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!

நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது .

முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டி கூறு போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பிரன்ஸ். இவர் ஆராதனா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார் . ஆனால் சூழ்நிலை காரணமாகவோ, பெற்றோர் வற்புறுத்தல் காரணமாகவோ அவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால், ஆராதனா மீது பிரன்ஸ் கடும் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது . அவரை சமாதானப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு பிறகும் ஆராதனா பிரின்சுடன் உறவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் பிரன்ஸ் பெற்றோர், உறவினர் சர்வேஷ் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் ஆராதனாவை கொல்ல திட்டமிட்டுக் கொண்டிருந்தார். அதன்படி நவம்பர் 9 ம் தேதி, ஆராதனாவை பிரின்ஸ் தனது பைக்கில் கோவிலுக்கு அழைத்துச் சென்றார். ஏற்கனவே தயாராக இருந்த சர்வேஷின் உதவியுடன் ஆராதனாவை கரும்பு தோட்டத்திற்கு அழைத்து சென்று அங்கு கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் .

பின்னர் இருவரும் இணைந்து அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி பாலித்தீன் பைகளில் அடைத்தனர். அருகில் இருந்த கிணற்றில் சில பாகங்களையும் தூரத்தில் உள்ள குளத்தில் அவரது தலையையும் வீசினர். சரியாக நவம்பர் 15ம் தேதி கிணற்றில் சில உடல் உறுப்புக்கள் மிதப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது . இது குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் நேற்று நவம்பர் 20ம் தேதி பிரின்ஸ் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கூரிய முனைகள் கொண்ட ஆயுதம், நாட்டு கைத்துப்பாக்கி, தோட்டா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வெட்டப்பட்ட உடல் பாகங்களை எடுப்பதற்காக பிரின்ஸை சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். அப்போது, மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை கொண்டு போலீசாரை நோக்கி பிரின்ஸ் சுடத் தொடங்கினார். போலீசாரும் திரும்பி சுட்டதில் பிரின்ஸ் படுகாயம் அடைந்தார். அவருடன் இந்த கொலை சம்பவத்தில் உதவியாக இருந்த சர்வேஷ், பிரமிளா யாதவ், சுமன், ராஜாராம், கலாவதி, மஞ்சு, ஷீலா என அனைவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தேடப்பட்டு வருகின்றனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More