திண்டிவனம் அருகே மதுபான கடையை உடைத்து திருட முயன்ற கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் பக்கிங்காம் கால்வாய் அருகில் அரசு டாஸ்மார்க் கடை இயங்கி வருகிறது. நேற்று வழக்கம்போல் டாஸ்மார்க் கடை விற்பனையாளர் பத்து மணிக்கு மூடிவிட்டு சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கடப்பாரை போன்ற பயங்கர ஆயுதங்கள் எடுத்துக்கொண்டு டாஸ்மார்க் கடையின் பூட்டை உடைத்து உள்ளனர் . ஆனால் பூட்டு உடைக்க முடியவில்லை பின்னர் டாஸ்மார்க் கடை வலது பக்கத்தில் உள்ள சுவரை கடப்பாரையால் பலமாக துலையிட்டு உள்ளனர்.
அந்த முயற்சியும் தொற்றுபோனதால் ஏமாற்றம் தாங்க முடியாமல் டாஸ்மார்க் கடையில் முன்பக்கம் உள்ள சிசிடிவி கேமராவை உடைத்து விட்டு எதிரே இருந்த மின்கம்பத்தில் உள்ள மின்விளக்கையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி உள்ளனர்.
இதனையடுத்து மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுபானம் கொள்ளை அடிக்க வந்த முயற்சியில் ஈடுபட்ட நபர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.