Skygain News

காதலை கைவிட மறுத்த மகளை கொன்று தற்கொலைக்கு முயன்ற தாய்..! திருநெல்வேலி அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்…

திருநெல்வேலி அடுத்த தாழையூத்து அருகே உள்ள பாலாமடை பெருமாள்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சி. இவர் சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆறுமுக கனி இவர்களது மகள் அருணா(19). இவர் கோவையில் நர்சிங் படித்து வந்தார்.

சமீபத்தில் அவர் விடுப்பு எடுத்துக்கொண்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று நள்ளிரவு அக்கம்பக்கத்தினர் பேச்சியின் வீட்டுக்கு சென்றுள்ளனர். அப்போது அருணா மயங்கி கிடந்துள்ளார். அவரது அருகில் தாய் ஆறுமுக கனி வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்துள்ளார். உடனே அவர்கள் 2 பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அருணா கழுத்தை நெரித்துக்கொலை செய்யப்பட்டு இருப்பதும், ஆறுமுக கனி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து சீவலப்பேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை விசாரணை நடத்தினர். அதில் அருணா கல்லூரியில் படித்தபோது இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள அருணாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்த அருணாவுக்கு வேறு மாப்பிள்ளையுடன் திருமணம் செய்வதற்காக அவரது பெற்றோர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதற்கு அருணா சம்மதம் தெரிவிக்காததால் ஆறுமுககனி தனது மகளை கழுத்தை நெரித்துக்கொலை செய்துவிட்டு, தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே மகளை கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More