சுற்றுலா பயணிகள் தங்களது விடுமுறையை மகிழ்ச்சியாக கழிக்கும் வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபியில் மயிலாட்டம் கரகாட்டம் பொய் கால் குதிரை மற்றும் கிராமங்களில் பயன்படுத்தும் அம்மி, ஏர் உழும் இயந்திரம், குழவி கல் உள்ளிட்ட பொருட்களையும் காட்சிப்படுத்தி உள்ளனர் . இன்றைய தலைமுறையினர் இவை அனைத்தையும் வியப்புடன் கண்டு மகிழ்ந்தனர். இது குறித்து விஜிபி உரிமையாளர் ரவிதாஸ் கூறுகையில் :
ஒவ்வொரு ஆண்டும் விஜிபியில் நாங்கள் மக்களை கவரும் வகையில் வித்தியாசமான நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம் எனவும் அதே போல இந்த ஆண்டு கிராமிய கலையை பற்றி இங்கு வரும் பார்வையாளர்கள் அறிந்து கொள்ளும் வகையில் உறியடி மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம் கிராமிய பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாகவும் இந்த நிகழ்ச்சிகளுக்கு மக்களின் வரவேற்பு உள்ளதாக கூறிய அவர் தொடர்ந்து வரும் ஒன்பதாம் தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெறும் என கூறினார்