தருமபுரி மாவட்டத்தில் அருகிலுள்ள பாலக்கோடு அருகே வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் 26 வயதான திருமூர்த்தி. இவர் பெங்களூருவில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகிரர். இதனிடையே திருமூர்த்தி, தன்னுடன் பணிபுரிந்த மைசூரை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வேறு நபருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால் மனம் உடைந்து போன திருமூர்த்தி 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார் ஆனால் அவரின் உறவினர்கள் அவரை காப்பாற்றி உள்ளனர். இந்த நிலையில், திருமூர்த்தி தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

கடந்த வியாழக்கிழமை அன்று சேலத்தில் உள்ள தனது அக்காவுக்கு தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக வாட்ஸாப்ப் மூலம் செய்தி அனுப்பிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, மணியக்காரன் கொட்டாய் மலையின் மீது ஏறிய அவர் அவரின் உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார், திருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.