கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் 2 லட்சத்தி 3000 கன அடி நீர் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
கதவனை அருகே ஆற்றின் கரையோரத்தில் உள்ள சுடுகாட்டு பகுதியில் மீனவர்கள் பயன்படுத்திய பயன்படாத வலைகள் அருகே கிடந்துள்ளது. நீரில் அடித்து வரப்பட்டதாக கூறும் 10 அடி அரிய வகைநாகப்பாம்பு அந்த வலையில் மாட்டிக் கொண்டு சிக்கி உள்ளது.
இந்நிலையில் இன்று காலை மீனவர்கள் மீன் வலைகள், ரம்பர் படகுகளை ஆற்றிலிருந்து வெளியேற்றி பாதுகாப்பாக வைக்க செல்லும் போது பாம்பை பார்த்து அச்சமடைந்துள்ளனர்.
இந்த செய்தி ஊருக்குள் பரவ பொதுமக்கள், மீனவர்கள் அப்பகுதியில் குவிந்தனர் . பின்னர் தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்து வனத்துறையினருக்கு தகவல் தகவல் கொடுத்ததன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 30 நிமிட போராட்டத்திற்கு பிறகு பாம்பை உயிருடன் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.