திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுக தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
அங்கு அவருக்கு தொண்டர்கள் உறுசாக வரவேற்பு கொடுத்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது :
மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை தான் ஆ.ராசாவின் அண்மைக்கால சர்ச்சை பேச்சு என்றும் . ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்பந்திக்க கூடாது. ஓபிஎஸும், ஈபிஎஸும் தனித்தனியாக பிரதமரை சந்தித்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் நான் செல்வேன் என தெரிவித்தார் .
மேலும் பேசிய அவர் போதைப்பொருள் கடல் வழியாக வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என திமுக அமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் நுழையும் முன்பே அதனை தடுக்க வேண்டும். அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டு காவல் துறை அதனை தடுக்க வேண்டும் எனக் கூறினார்.