Skygain News

ஆ.ராசாவின் முறையற்ற பேச்சு மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை..! சசிகலா ஆவேசம்…

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா அதிமுக தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அங்கு அவருக்கு தொண்டர்கள் உறுசாக வரவேற்பு கொடுத்தனர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா கூறியதாவது :

மின் கட்டண உயர்வை திசை திருப்பும் வேலை தான் ஆ.ராசாவின் அண்மைக்கால சர்ச்சை பேச்சு என்றும் . ரேஷன் கடையில் முறையாக அரிசி வழங்க வேண்டும். தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்பந்திக்க கூடாது. ஓபிஎஸும், ஈபிஎஸும் தனித்தனியாக பிரதமரை சந்தித்தது அவர்களின் உட்கட்சி பிரச்சினை. அதிமுக கட்சி தலைமை அலுவலகத்திற்கு நிச்சயம் நான் செல்வேன் என தெரிவித்தார் .

மேலும் பேசிய அவர் போதைப்பொருள் கடல் வழியாக வருவதால் கட்டுப்படுத்த முடியவில்லை என திமுக அமைச்சர் கூறுகிறார். தமிழகத்தில் நுழையும் முன்பே அதனை தடுக்க வேண்டும். அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டு காவல் துறை அதனை தடுக்க வேண்டும் எனக் கூறினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More