தேவையான பொருட்கள்:
துண்டு மீன் – 250 கிராம்
சோளமாவு – 2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 1
கொத்தமல்லி – சிறிதளவு
பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்
எலுமிச்சை பழம் – பாதி
மிளகு பொடி – 1 ஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
இஞ்சி – சிறிய துண்டு
தேங்காய் துருவல் – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, பச்சை மிளகாயை ஆகிய பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும். பின் சிறிதளவு மிளகாய்த்தூள், எலுமிச்சை சாறு, மிளகு தூள், பூண்டு விழுது, சோளமாவை சேர்த்து நன்றாக கலக்கவும். இந்த மசாலாவை மீனுடன் சேர்த்து பிரட்டி 4 மணி நேரம் பிரிட்ஜ் பீரீசரில் வைக்கவும். அடுத்து ஊற வைத்த மீனை தேங்காய் துருவலில் போட்டு பிரட்டவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். மாறுபட்ட சுவையில் தேங்காய் பிஷ் பிரை ரெடி.