காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் சிபிஎஸ்இ பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களை ஏற்றிச் செல்ல 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. தொடர்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு பள்ளி பேருந்துகளிலும் தீ பரவியது.
இதையடுத்து விபத்து குறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் தீ இணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் கொழுந்து விட்டு எரிந்து வந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இருப்பினும் 3 பள்ளி பேருந்துகளும் முற்றிலும் எரிந்து தீயில் கருகி நாசமனது.
இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த சுங்குவார்சத்திரம் போலீசார் பேருந்து பேட்டரியில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து நேரிட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.