திருநெல்வேலி மாவட்ட நீச்சல் வீரர்கள் சங்கம் சார்பில் மாநில அளவிலான நீச்சல் போட்டி திருநெல்வேலி பாளையங்கோட்டை அடுத்த கக்கன் நகர் அருகே உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நீச்சல் குளத்தில் இன்று தொடங்கியது.
11 வயது முதல் 18 வயது நிரம்பியவர்கள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தகுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது இதையடுத்து இன்றும் நாளையும் நடைபெறும் இந்த நீச்சல் போட்டியில் பெண்கள் உள்பட சுமார் 800 மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
50 மீட்டர் மற்றும் 100 மீட்டர் என இரண்டு பிரிவுகளின் கீழ் முன்னோக்கி நீந்தி செல்லுதல் பின்னோக்கி நீந்தி செல்லுதல் ஆகிய வகைகளில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது .