Skygain News

சென்னை – திருச்சி நான்கு வழி சாலையில் ஏற்பட்ட கோர விபத்து..! 9 பேர் படுகாயம்…

உளுந்தூர்பேட்டை அருகே 10-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ மீது நவீன ரக இருசக்கர வாகனம் மோதி சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் பறக்கும் சிசிடிவி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பு ஆட்டோ ஓட்டுனரான இவர் அருகில் உள்ள பாதூர் கிராமத்திற்கு பயணிகளை ஏற்றி சென்று திரும்பி வந்து கொண்டிருந்தார் .

சென்னை திருச்சி நான்கு வழி சாலையில் உள்ள பாதூர் பஸ்ந் நிறுத்தம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது பின்னால் வந்த அதிநவீன வசதி கொண்ட இரு சக்கர வாகனம் ஆட்டோ மீது மோதியது இதில் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது அதில் ஆட்டோ ஓட்டுநர் பயணிகள் எட்டு பேர் என 9 பேர் படுகாயம் அடைந்தனர் .

காயம் அடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது . ஆட்டோ மீது மோதிய இருசக்கர வாகனம் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More