Skygain News

விதிகளை மீறி அதிக பாரம் ஏற்றி முன்பக்க இரு சக்கரங்களை அந்தரத்தில் பறக்கவிட்டு சென்ற டிராக்டர்..! வைரலாகும் வீடியோ…

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டார பகுதிகளில் அதிகளவு கரும்பு பயிரிடப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்புகளை டிராக்டர், லாரிகளில் அரவைக்கு அனுப்பி வருகின்றனர்.

தினசரி ஏராளமான வாகனங்கள் கரும்பு ஏற்றி ஆலைக்கு செல்கின்றன. டிராக்டர், லாரிகளில் கரும்பு ஏற்றி செல்ல சில விதிமுறைகள் உள்ளன. இதனை மீறி அதிகளவு கரும்பை ஏற்றி செல்வதால் தினமும் விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. டிராக்டரில் அதிகபட்சமாக 15 டன், லாரிகளில் 25 டன் வரை கரும்பு ஏற்றலாம்

அதனை மீறி, திருக்கோவிலூர் அடுத்த மணம்பூண்டி நான்கு முனை சந்திப்பில் ஒரு டிராக்டரில் கரும்பு 25 டன் அளவுக்கு பாரம் ஏற்றி நான்கு சக்கரத்தில் போகவேண்டிய டிராக்டர் இரண்டு சக்கரத்தில் ஆபத்தான முறையில் கரும்பு ஏற்றி செல்லும் காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More