தர்மபுரியில் கனிமவளத்துறையில் இணை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் என்பவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.
கிராவல் மண் எடுப்பதில் முறை கேடு தொடர்பாக சிபிசிஐடி போலிசார் வழக்கு பதிவு செய்ததில் ஜாமின் பெற்று தற்பொழுது காத்திருப்போர் பட்டியலில் சுரேஷ் உள்ளர். இந்நிலையில் இன்று காலை 8 மணியில் இருந்து சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர் .