விக்ரம் நடிப்பில் நேற்று வெளியான கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவான கோப்ரா திரைப்படம் விக்ரமை மீண்டும் வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும் என ரசிகர்களால் நம்பப்பட்டது. ஆனால் கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் கோப்ரா பட இயக்குனரைப்பற்றி பேசியது தற்போது வைரலாகி வருகின்றது. அவர் கூறியதாவது, கோப்ரா படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து டிமான்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரின் முதல் படத்தில் என்னைப்போன்று தமிழ் நடிகர்களை தான் பயன்படுத்தினார்.
அப்படம் ஹிட் ஆன பிறகு அடுத்த படத்தில் ஹிந்தி நடிகர்களை பயன்படுத்தினார்.ற்போது பெரிய ஹீரோவின் படமான கோப்ரா படத்தில் தமிழ் நடிகர்களை விட ஆங்கில நடிகர்கள் மற்றும் ஹிந்தி நடிகர்களை தான் அதிகமாக நடிக்கவைக்கின்றார். ஹிந்தி நடிகர்களுக்கே தமிழ் படங்களில் வாய்ப்பு வழங்கினால் என்னை போன்ற நடிகர்கள் எங்கு பொய் நடிக்கின்றது.
உங்களை ஹிந்தி நடிகர்களை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ் நடிகர்களுக்கும் வாய்ப்பு அளியுங்கள் என்றுதான் சொல்கின்றேன் என்று ஆவேசமாக பேசினார் கூல் சுரேஷ்.