தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. நாளுக்கு நாள் படத்தின் வசூலும் கணிசமாக உயர்ந்து வருகின்றது. மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் வெளியான இப்படம் நூறு கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் நானே வருவேன். சிறந்த திரைப்படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ள தனுஷ் – செல்வராகவன் கூட்டணி நான்காவது முறையாக இணைந்துள்ளதால் இப்படத்தை அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் சினிமாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் வகையில் நானே வருவேன் திரைப்படம் பொன்னியின் செல்வன் வெளியாகும் அதே செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவின.மேலும் தற்போது நானே வருவேன் திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் இந்த திரைப்படங்களின் முதல் நாள் கலேக்ஷன் பெரியளவில் இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்நிலையில் தனுஷின் மற்றுமொரு படமான வாத்தி டிசம்பர் மாதம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது