ரஜினி தற்போது நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் ரஜினியின் வீட்டில் தற்போது ஒரு விசேஷம் நடந்துள்ளது.
நடிகர் ரஜினி தனது இளைய மகள் சௌந்தர்யாவை, அபெக்ஸ் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரும் தொழிலதிபருமான வணங்காமுடியின் மகன் விசாகனுக்கு தனது இரண்டாவது திருமணம் செய்து கொடுத்தார்.

இந்த தம்பதியினர் மிகுந்த சந்தோஷத்துடன் தங்களது மண வாழ்க்கையை துவங்கினர். ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா தனக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ள செய்தி குறித்து தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அதில், “கடவுளின் அபரிமிதமான கருணையுடனும், எங்கள் பெற்றோர் ஆசீர்வாதத்துடனும் விஷாகன் (கணவர்), வேத் (முதல் குழந்தை) மற்றும் நானும் இன்று வேதின் தம்பி வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று பதிவிட்டுள்ளார். இதனையடுத்து ரசிகர்களும், திரைபிரபலங்களும் சௌந்தர்யாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
With gods abundant grace and our parents blessings 🙏🏻😇Vishagan,Ved and I are thrilled to welcome Ved’s little brother 💙💙💙 VEER RAJINIKANTH VANANGAMUDI today 11/9/22 #Veer #Blessed 😇🥰thank you to our amazing doctors @sumana_manohar Dr.Srividya Seshadri @SeshadriSuresh3 🙏🏻 pic.twitter.com/a8tXbqmTxf
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 11, 2022