தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகராக வலம் வருகின்றார் சிம்பு.கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மாநாடு ,வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளது.தற்போது ஒபிலி கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
இதன்பின் கொரோனா குமார் படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.இந்நிலையில் கோகுல் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இதனால் சிம்புவின் ‘கொரோனா குமார்’ படம் டிராப் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக சிம்புவின் அடுத்த படத்தை சுதா கொங்கரா அல்லது ஏ.ஆர்.முருகதாஸ் இருவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஏ.ஆர்.முருகதாஸ் படம் சூப்பர் ஹீரோ சப்ஜெக்ட்டில் உருவாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.