விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேலும் இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரையில் வெளியாகவுள்ளது.அண்மையில் பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் தனது ரசிகர்களை அழைத்து சந்தித்தார் விஜய்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.இந்த சந்திப்பிற்கு வந்த ரசிகர் ஒருவர் பேசியபோது, ‘ தங்களுடைய கிராமம் மிக சிறுது. எங்களுடைய கிராமத்துக்கு பஸ் வசதி கூட கிடையாது, தெரு வசதியும் கிடையாது. ஆனாலும் எங்கள் கிராமத்திற்கு விஜய் வந்தார்.
#Vijay | விஜய் எங்கள் கிராமத்திற்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார்.
— LOGANATHAN VARISU (@Loganathan_07) November 20, 2022
அவர் பட பெயர்களை குழந்தைகளுக்கு வைக்கிறோம்.
சிவகூடல் கிராம ரசிகர் நெகிழ்ச்சி. #VijayMakkalIyyakkam | #VijayFansMeet pic.twitter.com/6ypVfUa6Sf
கொஞ்ச நேரம் எங்களுடன் இருந்துவிட்டு தான் சென்றார். எங்கள் ஊருக்கு அன்னதானம் எல்லாம் செய்துள்ளார். எங்கள் ஊரில் பிறக்கும் குழந்தைகளுக்கு விஜய் அண்ணாவின் படங்களுடைய பெயர்களை தான் வைக்கிறோம்.எங்கள் ஊருக்கு பெருமாள் கோவில் கட்டி கொடுத்துள்ளார் விஜய். அதுமட்டுமின்றி முதன் முதலில் விஜய்க்கு கல்வெட்டு மற்றும் சிலை வைத்தது எங்கள் கிராமத்தில் தான் ‘ என்று அந்த ரசிகர் கூறியுள்ளார்.