விக்ரம் மற்றும் அஜய் ஞானமுத்து கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் தான் கோப்ரா. விக்ரம் படம் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆனதால் தங்கள் நாயகனை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். தமிழ் சினிமாவில் அனைத்து விதமான ரசிகர்களுக்கும் விக்ரமை பிடிக்கும் என்பதால் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் கோப்ரா படத்தை காண ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில் நேற்று இப்படம் உலகம் முழுவதும் வெளியானது. படத்தில் என்னதான் விக்ரமின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வருகின்றது. படத்தின் நீளம், ஸ்வாரஸ்யமில்லாத திரைக்கதை, சலிப்புத்தட்டும் காதல் காட்சிகள், குழப்பமான கதை மற்றும் திரைக்கதை என படத்திற்கு ஏகப்பட்ட குறைகளை ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் என்னதான் கோப்ரா திரைப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் அடித்து நொறுக்கி வருகின்றது. நேற்று இப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் உலக அளவில் ரூ. 10 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கேரளாவில் மட்டும் ரூ. 1.25 கோடி வசூல் செய்திருக்கிறது. இந்தியா தவிர்த்து மலேசியாவிலும் கோப்ராவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.