Skygain News

பாலியல் புகார் குடுப்பேன்னு மிரட்டுனாங்க..நான் எதையும் திருடல..அஜித் பட நடிகை மீது வாலிபர் புகார்..!

அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தவர் பார்வதி நாயர். இவர் தமிழில் கமல்ஹாசனின் உத்தம வில்லன், பார்த்திபன் இயக்கிய கோடிட்ட இடங்களை நிரப்புக, உதயநிதி ஸ்டாலின் உடன் நிமிர், விஜய் சேதுபதியின் சீதக்காதி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் ஆலம்பனா என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இதில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பார்வதி.வளர்ந்து வரும் நடிகையான இவர் சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த மாதம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில் தனது வீட்டில் இருந்து விலையுயர்ந்த கடிகாரங்கள், ஐபோன் மற்றும் லேப்டாப் என 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் காணாமல் போனதாக அந்த புகாரில் அவர் தெரிவித்திருந்தார்.

இவற்றையெல்லாம் தன்வீட்டில் பணிபுரிந்த சுபாஷ் சந்திர போஸ் என்கிற இளைஞன் தான் திருடிவிட்டதாகவும் பார்வதி நாயர் கூறி இருந்தார்.இந்நிலையில் பார்வதி நாயர் தன் மீது பொய் புகார் கொடுத்திருப்பதாக சுபாஷ் தெரிவித்துள்ளார். மேலும் பார்வதி நாயர் தன்னை அறைந்ததுடன், துப்பியதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் சுபாஷ்

.அவர் கூறியதாவது , பார்வதி நாயரின் வீட்டில் நள்ளிரவில் நடந்த மது விருந்தில் ஆண் நண்பர்கள் கலந்து கொண்டார்கள். அப்பொழுது நடந்த சில விஷயங்களை நான் பார்த்துவிட்டேன். நான் பார்த்ததை பார்வதியும் பார்த்துவிட்டார். இங்கு நடந்ததை வெளியே சொல்லக் கூடாது என்று முதலில் மிரட்டினார். பின்னர் திருட்டுப் பழி சுமத்தி போலீசில் புகார் அளித்தார் என்றார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More