மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான ‘பொன்னியின் செல்வன்’ கதை அதே பெயரில் படமாக உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘பொன்னியன் செல்வன்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.இந்நிலையில் ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் கலந்து கொண்டு பேசிய சுஹாசினி மணிரத்னம், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில்தான் அதிகம் நடந்துள்ளது. ஆகவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் – Suhashini at PS 1 Promo event in Andhra. pic.twitter.com/zUiML3IAuh
— Blue Sattai Maran (@tamiltalkies) September 27, 2022
தமிழ்நாட்டில் வெறும் பத்து நாட்கள் மட்டுமே ஷுட்டிங் நடைபெற்றது. எனவே இது தெலுங்கு மக்களின் படம். இப்படத்தை நீங்கள்தான் வெற்றியடை செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் கடுப்பான தமிழ் சினிமா ரசிகர்கள் சுஹாசினியின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.