Skygain News

மீண்டும் அதையே செய்யும் ஜெய்..சர்ச்சையில் சிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகைகளின் பட்டியலில் இருக்கும் மிக முக்கியமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என்று எல்லோராலும் அழைக்கப்படும் வாணி போஜன் சீரியல்களில் நடித்து பிரபலமானார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரைக்கு அடியெடுத்து வைத்த வாணி போஜன் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றார்.

அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் வாணி போஜன். அதைத்தொடர்ந்து தற்போது வாணி போஜனின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன.

இந்நிலையில், சிறந்த படங்கள் மூலம் வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகை வாணி போஜன் தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கியுள்ளார். அது என்னவென்றால், வாணி போஜனிடம் கதை சொல்ல இயக்குனர் ஒருவர் சென்றுள்ளாராம். அப்போது வாணி போஜனுடன் நடிகர் ஜெய் இருந்துள்ளார்.

ஒரு முறை அல்ல இரு முறை அல்ல நான்கு முறை வாணி போஜனிடம் கதை சொல்ல சென்ற போதெல்லாம் வாணி போஜனுடன் ஜெய் இருப்பதை பார்த்த இயக்குனர் கதை சொல்லாமல் வந்துவிடுகிறாராம்.

இதே போல நடிகர் ஜெய் சில வருடங்களுக்கு முன்பு நடிகை அஞ்சலியிடம் நடந்துகொண்டார். அஞ்சலி நடிக்கும் படங்களிலும், கதைகளிலும் ஜெய் அப்போது தலையிட்டதாக பல தகவல்கள் வந்துள்ளன.இதைத்தொடர்ந்து தற்போது கோலிவுட் வட்டாரங்களில் ஜெய் மற்றும் வாணி போஜனின் விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More