இந்தியாவின் தென்கோடி முனையில் அமைந்துள்ள கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்
அந்தவகையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று குமரி மாவட்டத்தில் குழித்துறை தாமிரபரணி ஆற்றிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியிலும், திற்பரப்பு நீர்வீழ்ச்சி உட்பட பல்வேறு நீர் நிலைகளில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் மறைந்த முன்னோர்களுக்கு பலி தற்ப்பணம் செய்து வருகின்றனர்.இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.
தங்கள் முன்னோர்களை நினைத்து ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய இரு நாட்களில் புனித நீர் நிலைகளுக்கு சென்று அரிசி, தர்ப்பை, எள், உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு தர்ப்பணம் பூஜைகள் செய்து புனித நீராடுவது நம் பாரம்பரிய முறைகளில் ஓன்று.
அந்தவகையில் இன்றுஆடி அமாவசையை முன்னிட்டு சரஸ்வதி தீர்தம், விநாயகர் தீர்த்தம், காயத்திரி தீர்த்தம் உள்ளிட்ட 16 வகை தீர்த்தங்களை கொண்ட முக்கடல் சங்கமம் கன்னியாகுமரி கடற்கரையில் அதிகாலை முதலே பல்லாயிரகணக்கான பொதுமக்கள் மறைந்த தங்கள் முன்னோர்களை நினைத்து வேதவிற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க எள், பச்சரிசி,தர்ப்பை மற்றும் பூக்களினால் பலிகர்ம பூஜை செய்து புனித நீராடினர்.