Skygain News

அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று தனி நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் அதிமுக இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்றும் ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே தொடர வேண்டும் என்றும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார் .

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை நீதிபதிகள் சுந்தர் மோகன் மற்றும் துரைசாமி அமர்வு தீவிரசமாக விசாரித்து வந்தது.

எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்களது விளக்கத்தை அளித்தனர். இதையடுத்து இரு தரப்பு வாதத்தையும் கேட்ட இரு நீதிபதிகள் தரப்பு கடந்த 25ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இந்த வழகின்மீது நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More