காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த கரும்பாக்கம் கிராமத்தில் இந்தியன் வங்கியின் அரும்புலியூர் கிளையானது செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் கரும்பாக்கம் சாத்தனஞ்சேரி சீத்தனஞ்சேரி பழவேரி திருவானைக்கோவில் தண்டரை மாம்பாக்கம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.
இந்த வங்கியில் இரவு காவலராக கரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஆப்பேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை வங்கி விடுமுறை என்பதால், இரவு காவலர் காவலுக்கு இருந்துள்ளார். இரவு அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் காவலரை பலமாக தாக்கி வங்கி பாத்ரூமில், கட்டி போட்டு வைத்துவிட்டு வங்கியில், பின் பக்கம் இருந்த ஜன்னலை உடைக்க முற்பட்டுள்ளனர்.
ஜன்னல் கம்பிகள் வலுவாக இருந்ததால், உடைக்க முடியாமல் திரும்பி சென்றனர். அதிகாலை பாத்ரூமில் முணுமுணு சத்தம் கேட்ட பிறகு பொதுமக்கள் காவலாளியை மீட்டு சாலவாக்கம் போலீசாருக்கு, தகவல் அளித்தனர். அத்தகவலின் பேரின் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காவலாளியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.