Skygain News

வரும் 15-ம் தேதி முக்கிய அறிவிப்பு வெளியிடும்..! முன்னாள் அமெரிக்க அதிபர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்…

கடந்த 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் அமெரிக்காவின் அதிபராக இருந்தவர் டொனால்டு டிரம்ப். பதவிக்காலத்தில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன இவர் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் – அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை டிரம்ப் மேற்கொண்டார் .

அதே வேளையில் , 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டொனால்டு டிரம்ப் படு தோல்வியடைந்தார். பின்னர் அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்தெடுக்கப்பட்டார்.

இதனிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் ஒஹியோ மாகாணத்தில் இன்று ஆதரவாளர்கள் மத்தியில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் பேசினார். அப்போது அவர் அவர் கூறியதாவது :

நான் வரும் 15-ம் தேதி செவ்வாய்கிழமை ப்ளோரிடா மார்-ஏ-லகோவில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன்’ என்றார். அமெரிக்க அதிபர் தேர்தல் 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் தான் போட்டியிடப்போவது குறித்து எதேனும் தகவலை டிரம்ப் வெளியிடுவாரா? அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ள நிலையில் தான் மீண்டும் டுவிட்டரில் இணைவது குறித்து ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா? என பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ளன. இந்த கேள்விகளுக்கு வரும் 15-ம் தேதி பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More