ஈரோடு பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள்.
நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி என்று எடப்பாடி பழனிசாமி பேசினார். இயக்குனர் நவீன் அவரின் இந்த பேச்சு தொடர்பாக போஸ்ட் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல், என்று விமர்சனம் செய்துள்ளார்.
