தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் பள்ளிக் கல்வித்துறை மாணவருடைய பல்வேறு திறன்களை மேம்படுத்தும் விதத்தில் பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி, ஓவியப்போட்டி, நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு நற்சான்றுகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று கலை திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் பள்ளி மாணவர்களிடையே உற்சாகப்படுத்தும் விதத்தில் தமிழர்களின் பாரம்பரியமான பறை இசையை அடித்து கலைத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.
இதில் மாணவருடைய ஒற்றுமையும் அவருடைய கலை திறன்களையும் வரவேற்கும் விதத்தில் பேரூராட்சி மன்ற தலைவர் இதுபோன்று பறை இசையை அடித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.