Skygain News

கலைத்துறை வித்தகர் விருதுக்கான சொந்தக்காரர் ஆரூர் தாஸ் காலமானார்..!

வாழ வைத்த தெய்வம் என்கிற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் வசனகர்த்தா ஆரூர் தாஸ்(91) காலமானார். வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மாலை 6:40 மணியளவில் காலமானார். பாசமலர் படத்தில் மூலம் மிகப் பிரபலமானார். எம்ஜிஆ,ர் சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல ஏராளமானோர் படங்களுக்கு வசனம் எழுதி இருக்கிறார். மேலும் 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவர் கதை, வசனம், திரைக்கதை அமைப்பில் நிறைய படங்கள் வெளிவந்துள்ளன.

விதி படத்தின் வசனம் மூலம் மிகவும் பிரபலம் பெற்றிந்தார். ஒரு காலத்தில் டப்பிங் படங்களுக்கு பெரும்பாலும் வசனம் எழுதியவர் ஆரூர் தாஸ்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திரைத்துறையில் இவரது சாதனையை கௌரவிக்கும் விதமாக கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். ஆரூர்தாஸ் இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

ஆரூர் தாஸ் மறைந்த காரணத்தினால் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இன்று நண்பகல் 12 மணி அளவில் இறுதி சடங்கு நடைபெறுகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More