நெல்லை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில் ஆவணி மாதம் வரக்கூடிய மூலத் திருநாள் அன்று சுவாமி நெல்லையப்பர் கருவூர் சித்தருக்கு நெல்லை மாவட்டம் மானூர் சென்று காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி 11 நாட்கள் நடைபெறும்.
இந்த திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்ற விழாவை முன்னுட்டு ,திருக்கொடி பல்லக்கில் வைக்கப்பட்டு கோவில் பிரகாரத்தில் வலம் வர எடுத்துவரப்பட்டு சுவாமி சன்னதி முன் மண்டபத்தில் நெல்லையப்பர் கோவிலில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது .
இதையடுத்து 16 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. 4ம் திருவிழாவான 29ந்தேதி அன்று சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும்.