பிக்பாஸ் வீட்டில் தற்போது ஆதிவாசிகள் மற்றும் ஏலியன்ஸ் டாஸ்க் சென்று கொண்டிருக்கிறது. இந்த டாஸ்கில் ஆதிவாசிகளின் செல்வங்களை ஏலியன்ஸ் திருடி வைத்துக்கொள்ள வேண்டும். இறுதியில் யாரிடம் செல்வம் அதிகமாக இருக்கிறதோ அந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
அது மட்டும் இல்லாமல், அதிக செல்வத்தை வைத்திருப்பவர் நாமினேஷனிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.இந்நிலையில் நேற்றைய எபிசோடில் அமுதவாணன் மற்றும் அசீம் மோதலில் இறங்கினர்.அதில் அசீம் தன்னை அடித்ததாக அமுதவாணன் வீட்டில் இருப்பவர்களிடம் கத்தி கூச்சலிட்டார்.
இதன் பின்னர் ஹவுஸ்மேட்ஸ் எல்லோருமே அசீமுக்கு எதிராக திரும்பி நீ என்ன ரௌடியா? வீட்டில் ரௌடித்தனம் பண்றீங்க என்று அனைவரும் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடி திட்டினார்கள். அனைத்து போட்டியாளர்களும் தனக்கு எதிராக திரும்பியதால் கடுப்பான அசீம் நான் பிக்பாஸ் வீட்டை விட்டு போகப்போறேன்.
என்னை வெளியே அனுப்பிடுங்க என்று பிக்பாஸிடம் கண்ணீர் மல்க கெஞ்சினார்.இதையடுத்து,மிகுந்த மன உளைச்சலில் இருந்த அசீம் திடீரென மயங்கி விழுந்தார். மெடிக்கல் ரூமில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து வந்த அசீம், அமுதவாணனை கட்டிப்பிடித்து தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். நான் செய்தது ரொம்ப தப்பு என்று கட்டி அணைத்து மன்னிப்பு கேட்டார்.