Skygain News

டபுள் எவிக்‌ஷன் உறுதி..பயம் காட்டிய கமல்..கலக்கத்தில் போட்டியாளர்கள்..!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் துவங்கப்பட்டு தற்போது ஐம்பது நாட்களை கடந்து போய்க்கொண்டிருக்கிறது.இந்நிகழ்ச்சியில் இருந்து இதுவரை சாந்தி, அசல் கோளார், ஷெரினா, விஜே மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டு உள்ளனர்.

தற்போது 13 போட்டியாளர்களே எஞ்சி உள்ளதால் அவர்களிடையே போட்டியும் கடுமையாகி உள்ளது.இந்த வாரம் வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே அனுப்பபடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்றைய எபிசோடு இறுதியில் செம்ம டிவிஸ்ட் ஒன்றை கொடுத்துவிட்டு சென்றார் கமல்ஹாசன்.

அது என்னவென்றால் வரும் வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து இரண்டு பேர் எலிமினேட் செய்யப்படுவார்கள் என அவர் அறிவித்தார்.கமலின் இந்த அறிவிப்பு போட்டியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே ரச்சிதா மற்றும் தனலட்சுமி ஆகியோர் நாமினேஷன் ஃப்ரீ ஜோனில் உள்ளதால் அவர்கள் இருவரும் எலிமினேட் ஆக வாய்ப்பு இல்லை. எஞ்சியுள்ள 11 போட்டியாளர்களில் இருந்து தான் இரண்டு பேர் இந்த வாரம் எலிமினேட் ஆவார்கள் என தெரிவது குறிப்பிடத்தக்கது

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More