Skygain News

ரச்சிதாவை பற்றி பிரிந்து போன கணவர் போட்ட வைரல் பதிவு..!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6 சில நாட்களுக்கு முன்பு கோலாகலமாக துவங்கியது. வழக்கம் போல வித்யாசமான மற்றும் சுவாரஸ்யமான போட்டியாளர்கள் இந்த சீசனிலும் கலந்துகொண்டிருப்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீசனில் ஜி.பி. முத்து, அசல் கொலார், ஷிவின் கணேசன், அஸீம், ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா, ஷெரினா, மணிகண்டன், ராஜேஷ், ரச்சிதா மகாலெட்சுமி, ராம் ராமசாமி, ஏடிகே, ஜனனி, சாந்தி, விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி சாணக்யன், விஜே கதிரவன், குயின்சி, நிவ்வா மற்றும் தனலெட்சுமி ஆகிய 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பிரிவோம் சந்திப்போம்’ என்ற சீரியல் மூலம் அறிமுகமான ரச்சிதா, அதன்பின்னர் ’சரவணன் மீனாட்சி’ தொடரில் நடித்து பிரபலமானார். இந்த தொடரின் மூலம் அவருக்கு பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. இந்நிலையில் பெங்களூரை சேர்ந்த சீரியல் நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரச்சிதா. திருமணத்திற்கு பின்னரும் பல சீரியல்களில் நடித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென தினேஷ் மற்றும் ரக்சிதா ஆகிய இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு தனித் தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இந்த சர்ச்சைகளுக்கு மத்தியில் ரச்சிதா தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய மனைவி பிக்பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளது குறித்து அவரை பிரிந்து வாழும் கணவர் தினேஷ் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் ’பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக பலரது இதயங்களை வெல்ல ரச்சிதாவுக்கு வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More