பிரதமர் நரேந்திர மோடியின் 72ஆவது பிறந்தநாள் விழாவை இந்தியா முழுவதுமுள்ள பாஜகவினர் பல்வேறு விதமான வகையில் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில், லட்சுமி சரஸ்வதி தேவியருடன் பல்வேறு மலர்களல் அலங்கரிக்கப்பட்டும், ரோஸ் நிற வெண்பட்டு உடுத்தியும் சிறப்பு அலங்காரத்துடன் தங்கத்தேரில்
காமாட்சி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பின்னர் பிரதமர் மோடியின் பல ஆண்டு காலம் நீடூடி வாழ்ந்திட வேண்டியும்,எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் அமோகமாக வெற்றி பெற்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சியே இந்தியாவில் மீண்டும் மலர்ந்திட வேண்டியும், காஞ்சிபுரம் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட தலைவர் கே.எஸ் பாபு தலைமையில், சிறப்பு அலங்காரத்துடன் தங்க தேரில் எழுந்தருளிய காமாட்சியம்பாளை வேண்டிக் கொண்டு, தங்கத் தேரினை வடம் பிடித்து இழுத்து கோவில் உள் பிரகாரங்களில் வலம் வந்து
தங்களது வேண்டுதல் நிறைவேற வேண்டி வழிபட்டு சென்றனர். இந்நிகழ்வில் ஏராளமனான பாஜகவினர் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்