Skygain News

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பிரமோஸ் ஏவுகணை வீசப்பட்ட விவகாரம் – 3 அதிகாரிகள் பணிநீக்கம்.!

பாகிஸ்தானுக்குள் தவறுதலாக பிரமோஸ் ஏவுகணை வீசப்பட்ட விவகாரத்தில் இந்திய விமானப்படை அதிகாரிகள் 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி, பராமரிப்புப் பணிகளின்போது தவறுதலாக ராஜஸ்தானில் இருந்து ஏவப்பட்ட பிரமோஸ் ஏவுகணை, பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் சீறிப் பாய்ந்து விழுந்தது.

ஏவுகணையில் வெடிகுண்டு எதுவும் பொருத்தப்படாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக நடைபெற்ற உயர்மட்ட விசாரணையில், விமானப்படை அதிகாரிகள் 3 பேர் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றாததால் ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது .

இதையடுத்து அந்த அதிகாரிகள் மூவரும் உடனடியாகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More