Skygain News

பிரேசில் அரசு அதிரடி முடிவு – சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19 கோடி அபராதம்..!

பிரேசில் நாட்டில் ஆப்பிள் ஐபோனை சார்ஜர் இல்லாமல் விற்றதால் ஆப்பிள் நிறுவனத்துக்கு ரூ.19.17 கோடி அபராதத்தை விதித்த அந்நாட்டு அரசு.

சார்ஜர் இல்லாமல் ஐபோன்களை விற்பனை செய்ய தடை செய்யப்பட்டு உள்ள நிலையில் பேட்டரி சார்ஜருடன் இல்லாத ஸ்மார்ட் போன்களின் விநியோகத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அந்நாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

புதிதாக வந்த ஐபோனின் 12 மாடல் சார்ஜர் இல்லாமல் விற்பனை செய்தது தொடர்பாக நடந்த விசாரணையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முழுமையற்ற தயாரிப்பின் விற்பனை, நுகர்வோருக்கு எதிரான பாகுபாடு, மூன்றாம் தரப்பினருக்கு பொறுப்பை மாற்றுதல் ஆகிய பல குற்றச்சாட்டு கூறப்பட்டு ஆப்பிள் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் விற்பனையில் இருந்து சார்ஜர்களை விலக்குவதற்கான முடிவு, சுற்றுச்சூழல் அர்பணிப்பில் இருந்து எடுக்கப்பட்டது என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More