Skygain News

பேனா சிலைக்கு பதிலாக பெரியாரின் சிலையை வைக்கலாமே..? பிரேமலதா விஜயகாந்த் சரமாரி கேள்வி…

தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா உரிய கொரோனா முன்னெச்சரிக்கையுடன் நடைபெற்றது. இதில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது பேசிய அவர், உங்கள் கேப்டன் நலமாக இருக்கிறார் .

கேப்டன் தமிழகத்தில் நடப்பதை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் .எந்த நோக்கத்திற்காக இந்த கட்சி துவங்கப்பட்டதோ . நிச்சயம் நாம் அதை அடைவோம். நாம் செய்த உதவிகளோ தர்மங்களோ என்றும் எப்போதும் வீண் போகாது . எழுதாத பேனாவிற்கு கோடி ரூபாய் செலவில் சிலை வைப்பதற்கு பதில், மக்களுக்கு சாலை வசதி குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்யலாமே? இல்லையென்றால் பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாமே? என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், புகை , மது உள்ளிட்ட பழக்கங்களில் சம உரிமை வேண்டும் என பெண்கள் ஈடுபடக் கூடாது. புகை ,கஞ்சா , மது உள்ளிட்ட பழக்கத்திற்கு ஆளாவதால் பெண்கள் பாலியல் துன்பத்தில் சிக்குகிறார்கள். ஆண்களுக்கு நிகராக சாதிப்பதில் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More