Skygain News

crime

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..!

நாட்டின் தலைநகரான டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஆசை காதலியை அவரது காதலரே கழுத்தை நெரித்து கொலை செய்து 35 துண்டுகளாக்கி நாய்களுக்கு போட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே போல் இன்னொரு திடுக்கிடும் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நடந்துள்ளது . முன்னாள் காதலியை கொலை செய்து 6 பாங்களாக வெட்டி கூறு போட்ட சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச …

ஆசை காதலியை 6 துண்டுகளாக வெட்டி கூறுபோட்ட கொடூர காதலன்..! Read More »

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை

கால்பந்து வீராங்கனை பிரியாவின் மரணத்தில் தலைமறைவாக இருந்து வரும் மருத்துவர்களை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன . முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இருக்கும் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா, பயிற்சியின்போது காலில் ஏற்பட்ட சவ்வு விலகல் பிரச்சனையால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல , அங்கே மருத்துவர்களின் தவறான சிகிச்சையினால், அவர் இரண்டு கால்களையும் இழந்து உயிரையும் இழந்து விட்டார். இதை அடுத்து இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை …

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் : தலைமறைவான மருத்துவர்களை பிடிக்க 3 தனிப்படை Read More »

மதவெறி பிடித்த காதலனை என்கவுன்டரில் சுட்டு பிடித்த போலீசார்..! காதலியை மாடியில் இருந்து தள்ளி கொன்ற வழக்கில் பரபரப்பு…

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வந்தவர் நிதி. இவர் சூபியான் என்று இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவரை காதலித்து வந்திருக்கிறார். ஒரு கட்டடத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் திருமணம் செய்யவேண்டுமென்றால் தனது இஸ்லாம் மதத்திற்கு மாற வேண்டும் என்று நிதியிடம் கறாராக சொல்லி இருக்கிறார் சூபியான். ஆனால் நிதி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் . நீ கட்டாயம் எங்கள் மதத்திற்கு , மாறியே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார் சூபியான். …

மதவெறி பிடித்த காதலனை என்கவுன்டரில் சுட்டு பிடித்த போலீசார்..! காதலியை மாடியில் இருந்து தள்ளி கொன்ற வழக்கில் பரபரப்பு… Read More »

சினிமா பாணியில் கொள்ளையடித்து சாலையோர மக்களுக்கு உதவி..! திருடன் பகிர் வாக்குமூலம்..

சென்னை தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர்,சீனிவாசன் நகர் சூராத்தம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர், வரதராஜன் (வயது-55) இவருக்கு உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக கடந்த 2ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவமனையில் இரண்டு நாள் சிகிச்சை பெற்று விட்டு 4ஆம் தேதி வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 8 சவரன் தங்க நகை காணாமல் …

சினிமா பாணியில் கொள்ளையடித்து சாலையோர மக்களுக்கு உதவி..! திருடன் பகிர் வாக்குமூலம்.. Read More »

இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால் கடுப்பான இளசுகள்…! மறுப்பு தெரிவித்த ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்..

திருப்பத்தூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பங்கில் திருப்பத்தூர் அப்பாய் தெருவை சேர்ந்தவர் ஷாகீர்(26) மற்றும் சிவகுமார் ஆகியோர் ஊழியராக பணிபுரிந்து வருகின்றனர். சம்பவத்தன்று பெட்ரோல் பங்கிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞர்கள், வாகனத்திற்கு இலவசமாக பெட்ரோல் நிரம்ப்பும் படி அடாவடியாக கூறியுள்ளனர். அதற்கு மறுப்பு தெரிவித்த ஷாகிர் மற்றும் சிவகுமாரை, அவர்கள் சரமாரியாக தாக்கி, அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் காயமடைந்த …

இலவசமாக பெட்ரோல் போட மறுத்ததால் கடுப்பான இளசுகள்…! மறுப்பு தெரிவித்த ஊழியர்களுக்கு நேர்ந்த சோகம்.. Read More »

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்..!அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரங்கல்

தவறான முறையில் மருத்துவர்களின் சிகிச்சையால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை பிரியா (17) இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். மருத்துவர்களின் அலட்சிய போக்கு, தவறான சிகிச்சை முறையே தங்கள் மகள் காலை இழக்க காரணம் என்று பெற்றோர்கள் புகார் அளித்ததும், அமைச்சர் மா.சுப்பிரமணியமும் இதை ஒப்புக்கொண்டு மேலும் மாணவிக்கு காயம் சரியான உடன் பெங்களூருவில் இருந்து செயற்கை கால் வாங்கி பொருத்தப்படும். பின் …

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை மரணம்..!அமைச்சர் மா. சுப்பிரமணியன் இரங்கல் Read More »

ஆற்காடு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு..!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் -30 லோடு ஆட்டோ டிரைவரான இவருக்கு தமிழ்அரசி வயது-21 என்ற மனைவியும் இவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி தாரணிகா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தமிழ்அரசி தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் இன்று மதியம் 3 மணி அளவில் அவரது கணவர் ஜானகிராமன் மற்றும் குடும்பத்தினர் திருத்தணி கோயிலுக்கு சென்றுள்ளனர் இதனை …

ஆற்காடு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக 7 மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு..! Read More »

அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்..!

ஆலங்குளம் காமராஜர் நகரில் வசிப்பவர் திருமலை முருகன். கடையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றும் இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்த நிலையில் இன்று காலை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை அக்கம்பக்கத்தினர் கண்டு அவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கூறியுள்ளனர். அவர் வந்து பார்த்தபோது நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் கடப்பாரை கொண்டு வீட்டு முகப்பு கதவை உடைத்து உள்ளே சென்று வீட்டிலிருந்த ஐந்துக்கும் மேற்பட்ட பீரோக்களை உடைத்து அதிலிருந்த …

அரசு அதிகாரி வீட்டில் கைவரிசை காட்டிய கொள்ளை கும்பல்..! Read More »

தஞ்சையில் சிக்கன்ரைஸ் கேட்டு ஓட்டல் உரிமையாளரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள்..! சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை.

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக சிக்கன் கார்னர் நடத்தி வருகிறார். இவருடைய கடையில் இரவு ஒருவர் வந்து சிக்கன்ரைஸ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த மாஸ்டர், உங்களுக்கு முன்னால் கேட்டவருக்கு கொடுத்து விட்டு தருகிறேன் என கூறி உள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. உடனே சிராஜூதீன் அவரை சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த வாலிபர் தனது நண்பர்கள் 2 பேரை …

தஞ்சையில் சிக்கன்ரைஸ் கேட்டு ஓட்டல் உரிமையாளரின் மண்டையை உடைத்த போதை ஆசாமிகள்..! சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் விசாரணை. Read More »

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து ஏமாற்றிய நபர் கைது..!

கடந்த 2021-ம் வருடம் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டம், பூட்டை கிராமத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர், சங்கராபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட விவசாய பொருட்களை நேரடி கொள்முதல் செய்து மொத்தமாக தஞ்சாவூர் மாவட்டம், புனவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்றதாகவும், அதற்குண்டான பணத்தை தராமல் ஏமாற்றிவருவதாக புகார் எழுந்தன. உடனடியாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் விவசாயிகளிடம் ஏமாற்றிய நபரை கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட …

கள்ளக்குறிச்சி அருகே விவசாயிகளிடம் நெல் மற்றும் எள் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து ஏமாற்றிய நபர் கைது..! Read More »