தேவையான பொருட்கள் :
சௌசௌ – 150 கிராம்
உருளைக்கிழங்கு – 150 கிராம்
கேரட் – 150 கிராம்
பூசணிக்காய் – 150 கிராம்
வாழைக்காய் – 150 கிராம்
வெங்காயம் – 150 கிராம்
தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 4
தயிர் – 1/2 கப்
சீரகம் – 1 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிது
தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
காய்கறிகள் மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிவிட்டு பின் மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
குக்கரை அடுப்பில் வைத்து, அனைத்து காய்கறிகளையும் போட்டு, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் விட்டு, சுமார் 20 நிமிடம் மூடி வேக வைத்து இறக்கிக் கொள்ளவும். பின்னர் குக்கர் மூடியை திறந்து அடுப்பில் வைத்து, காய்கறிகளில் உள்ள தண்ணீர் வற்றும் வரை கொதிக்க விடவும்.
அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் சிறிது உப்பை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விடவும்.
பின் அதில் தயிரை ஊற்றி 2 நிமிடம் கிளறி இறக்கி விடவும் அதேபோல் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு தாளித்த, பின் வெங்காயம் சேர்த்து, அதனை பொன்னிறம் வரும் வரை வதக்கி, அத்துடன் அந்த காய்கறி கலவையை ஊற்றி, ஒரு கொதி விட்டு, கொத்தமல்லி இலையை மேலாக தூவி இறக்கி விடவும்.

இப்போது சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த அவியல் தயார்…!