Skygain News

சிவகங்கை மாவட்டத்தில் 33 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு…

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த ஓராண்டில் மட்டும் 304 செல்போன்கள் தொலைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில் மாவட்டம் முழுவதும் போலீசாரால் இந்த ஒரு வருட காலத்திற்குள் 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 207 செல்போன்களை கண்டுபிடிக்கப்பட்டு இன்று அந்த செல்போன்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

இதற்கான நிகழ்ச்சி இன்று சிவகங்கையில் தனியார் மஹாலில் காவல்துறை சார்பில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொபைல் போன்களை தொலைத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தவர்களில் யாருடைய மொபைல் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதோ அவர்களுக்கு ஒரு அடையாள எண் கொடுத்து அவர்களை இந்த நிகழ்ச்சிக்கு வரவழைத்து அடையாள எண்ணின் படி வரிசையாக 207 நபர்களுக்கு அவர்களுடைய மொபைல் போன்களை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More