Skygain News

செட்டிநாடு ஸ்பெஷல் தும்ப பூவா.!

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு – 300 கிராம்
எண்ணெய் – 50
மில்லி கடுகு – 1
தேக்கரண்டி உளுந்து – 1
தேக்கரண்டி உப்பு –
தேவையான அளவு துருவிய தேங்காய் – 1
தேக்கரண்டி துருவிய கேரட் – 1
தேக்கரண்டி பச்சைப் பட்டாணி – 25 கிராம்
மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை
நெய் – சிறிதளவு
அவல் – 150 கிராம்
பச்சை மிளகாய் – 4
முந்திரி – 50 கிராம்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து, தனியாக வைக்கவும்.

பின்னர் புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து அதன் சாற்றை வடித்துகொண்டு. அதில் அவலைக் கொட்டி ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் உளுந்து போட்டு பொரிந்ததும், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் ஊற வைத்த அவல், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவையில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும். இப்போது ‘தும்ப பூவா’ தாயாராகிவிட்டது.

ஒரு கிண்ணத்தில் தும்ப பூவாவை நிரப்பி, அதை ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கவும். அதன் மீது வறுத்த முந்திரி, துருவிய கேரட், துருவிய தேங்காய் ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும். இது, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றது.

Share this post with your friends

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

என்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் பண்ண சொன்னாங்க! பிரபல நடிகரின் மகள் பேட்டி…

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வரலட்சுமி சரத்குமார், திரைத்துறையில் நடிகைகளுக்கு கொடுக்கப்படும் பாலியல்...

Read More